உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

Published On 2022-03-22 13:01 IST   |   Update On 2022-03-22 13:01:00 IST
உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் சரிவிகித உணவின் அவசியம் குறித்த போஷன் பக்வாடா முகாம் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா கூறியதாவது :

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 4-ந்தேதி வரை போஷன் பக்வாடா முகாம் நடைபெறுகிறது. அதன்படி  வருகிற 27-ந்தேதி வரை 6 வயது வரையுள்ள ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து ஊட்டசத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வருகிற 28, 29 தேதிகளில் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மார்ச் 30 முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை பரிசோனை முகாம், ஏப்ரல் 2,3 தேதிகளில் பழங்குடியினர் பகுதிகளில் பாரம்பரிய உணவு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஏப்ரல் 4-ந்தேதி போஷன் பக்வாடா நிறைவு விழா நடைபெறும் என்றார். 

Similar News