உள்ளூர் செய்திகள்
எருது விடும் விழா 300 காளைகள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நடந்த எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னகொத்தூர் மற்றும் தேவர்குந்தாணி கிராமங்களுக்குட்பட்ட மாரியம்மன் திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு இன்று சின்ன கொத்தூர் மற்றும் தேவர்குந்தாணி கிராமத் தில் எருதுவிடும் விழா நடைபெற்றது.காலை 7 மணி முதல் 12 மணிவரை நடை பெற்ற இந்த எருதுவிடும் விழாவில் வேப்பனப் பள்ளி சுற்று வட்டார பகுதி களான சூளகிரி, பேரிகை, பாகலூர், காவேரிபட்டினம், ராயக் கோட்டை, மகராஜகடை, கிருஷ்ணகிரி, ஓசூர் நகரங் களில் மற்றும் கர்நாடக& ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இந்த விழாவில் சுமார் 100 மீட்டரை தொலைவை 8.00 வினாடிகளில் விரைவாக கடந்த காளைக்கு ரூ. 55 ஆயி ரம் முதல் பரிசு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த விழாவில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். வேப்பனப்பள்ளி மற்றும் குருபரப்பள்ளி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.