உள்ளூர் செய்திகள்
.

வழிபாதை தகராறு: வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2022-03-19 15:10 IST   |   Update On 2022-03-19 15:10:00 IST
கிருஷ்ணகிரியில் வழிபாதை தகராறில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி டவுன் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது29). தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மணிகண்டனுக்கும், ரமேஷ்க்கும் இடையே வழிபாதை பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவர் களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

இந்த நிலையில் நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு நடந்தது-. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த காமராஜ், அஜித் ஆகியோர் சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷை அககம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து ரமேஷ் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டன், அஜித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Similar News