உள்ளூர் செய்திகள்
அடையாள அட்டை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை

Published On 2022-03-19 14:09 IST   |   Update On 2022-03-19 14:09:00 IST
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள ஆர்.சி.பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் பிறப்பு முதல் 18வயது வரை நிரம்பிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதனரெட்டி தலைமையில் நடந்தது.

 நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அறுவைச்சிகிச்சை, உபகரணங்கள் சம்பந்தமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. 

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் வட்டாட்சியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Similar News