உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பெரம்பலூரில் 3,465 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Published On 2022-03-13 13:58 IST   |   Update On 2022-03-13 13:58:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஓரே நாளில் 3,465 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: 

பெரம்பலூர் மாவட்டத்தில்  நேற்று சனிக்கிழமை  193 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள், இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், 

முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 84 நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தும் விதமாகவும் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1,120 நபர்களுக்கும், 

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 498 நபர்களுக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 894 நபர்களுக்கும்,  

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 953 நபர்களுக்கும் என பெரம்பலுர் மாவட்டத்தில் மொத்தம் 3,465 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும், கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக நமது பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்கவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News