உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் வாகன சோதனை நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் திருச்சி துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு உத்தரவின் பேரில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வி.எஸ்.கணேஷ் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருப்புசாமி ஆகியோர் பெரம்பலூர் நான்குரோடு புதிய பேருந்து நிலையம் ரோவர் கல்லூரி தண்ணீர் பந்தல் வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த தகுதி சான்றிதழ் இல்லாத 4 வாகனங்களை பறிமுதல் செய்தனர், மேலும் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருப்புசாமி,
வாகனங்களில் எல்.யி.டி. விளக்குகள், ஏர் ஹாரன் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். பறிமுதல் செய்த வாகனங்களை பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.