உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறன் மாணவர் களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய 48 குழந்தைகளும், உடல் இயக்க குறைபாடுடைய 24 குழந்தைகளும், செவித்திறன் குறைபாடுடைய 42 குழந்தைகளும், பார்வைக் குறைபாடுடைய 43 குழந்தைகளும் ஆக மொத்தம் 157 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.
அவர்களை பரிசோதித்து உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர். இதில் நடைப்பயிற்சி சாதனம் 2 குழந்தைகளுக்கும், கண் கண்ணாடி 14 குழந்தை களுக்கும், சிறப்பு சக்கர நாற்காலி 3 குழந்தை களுக்கும், கார்னர் சீட் 3 குழந்தை களுக்கும், பிரெய்லி கிட் 2 குழந்தை களுக்கும், செவித்துணைக் கருவி 5 குழந்தைகளுக்கும் ஆக மொத்தம் 29 குழந்தைகள் உதவி உபகரணங் களுக்காகவும், 2 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காகவும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளனர்.
அடையாள அட்டைக்காக 19 மாற்றுத்திறனுடைய மாணவர்கள் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது. வருவாய் துறை மற்றும் அரசு கேபிள் டிவி தனி வட்டாட் சியருடன் ஒருங் கிணைந்து இ-சேவை மையங்கள் மூலம் வருமான சான்று விவரங்கள் இணைய வழி பதிவேற்றம் செய்யப்பட்டது.
முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 42 மாற்றுத்திறனுடைய மாணவர்கள் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆதார் அட்டை இல்லாத 6 மாற்றுத்திறனுடைய குழந்தை களுக்கு எல்காட் மூலம் ஆதார் அட்டை எடுக்கப்பட்டது. முகாமில் கலந்துகொண்ட மாற்றுத் திறனுடைய மாணவர்களில் 23 நபர்களுக்கு புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.