உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பெரம்பலூரில் வருகிற 12ந்தேதி லோக்அதலாத்

Published On 2022-03-10 15:33 IST   |   Update On 2022-03-10 15:33:00 IST
பெரம்பலூரில் வருகிற 12ந்தேதி லோக்அதலாத் நிகழ்ச்சி நடை பெறுகிறது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோர்ட் வளாகத்தில் வரும் 12ம்தேதி லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள்மன்றம் நடை பெறுகிறது.

பெரம்பலூர்மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகள், சொத்து வழக்குகள், வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக் கல், வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள்,  திருமண உறவு தொடர்பான  வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் ஆகியவற்றில்  சமரசமாக தீர்வு காணப்படவுள்ளது.

தேசிய மக்கள் மன்றத்தின் முன்பாக, வழக்குகளில் சமரசமாக செல்வதால் தரப்பினர் கோர்ட் கட்டணமாக செலுத்தியுள்ள  முழுத்தொகையையும்  திருப்பி பெற்றுக் கொள்ளலாம்.

சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய முடியாது. தரப்பினர்களுக்கு வெற்றி, தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது.

எனவே பொதுமக்கள், வழக்காடிகள் வரும்12தேதி நடைபெற உள்ள தேசிய மக்கள் மன்றத்தில் தங்கள் வழக்கு களுக்கு சமரசம் செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விபரங் களுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, பெரம்பலூர் அலுவ லகத்தை நேரிலோ அல்லது 04328 296206 என்ற தொலை பேசியின் வாயிலாக தொடர்பு  கொள்ளலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்கோர்ட்  நீதிபதியுமான லதா தெரிவித்துள்ளார்.

Similar News