உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மாயமான இளம்பெண் பிணமாக மீட்பு

Published On 2022-03-09 13:51 IST   |   Update On 2022-03-09 13:51:00 IST
மாயமான இளம்பெண் பிணமாக மீட்டு போலீசார் விசாரணை
பெரம்பலூர்:

பெரம்பலூரில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பெண், கிணற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

பெரம்பலூர் - எளம்பலூர் சாலையிலுள்ள ஆர்.எம்.கே நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி அஞ்சலை (வயது 33). இவரை கடந்த 4-ந் தேதி முதல் காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், காலை வடக்குமாதவி சாலை, சாமியப்பா நகரைச் சேர்ந்த செல்லமுத்து என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் அஞ்சலை உடல் மிதந்துள்ளது.

இதை கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப் படை வீரர்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து அஞ்சலையின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News