உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-03-07 15:30 IST   |   Update On 2022-03-07 15:30:00 IST
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் :


பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 24). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யாவுக்கும்(19) கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே நேற்று முன்தினம் இரவு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த சரண்யா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்தார். இதையறிந்த உறவினர்கள் சரண்யாவை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News