உள்ளூர் செய்திகள்
தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் டி.சி.பி. லிமிடெட் தொழிற்சாலையில் 51வது தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. பாதுகாப்பு அதிகாரி தமிழரசு வரவேற்றார்.
பொது மேலாளர் கணேஷ் தலைமை தாங்கினார். உதவி பொது மேலாளர் பாலசுந்தரம், தொழிற்சாலை மருத்துவர் தயாளன், துணை மேலாளர்கள் மதியழகன், கார்த்திக், சந்திரசேகர் ஆகியோர் பேசினர்.
துணை மேலாளர் சிவகுமார் பாதுகாப்பு தின உறுதிமொழி வசிக்க, அனைத்து தொழிலாளர்களும் திரும்ப கூறி எடுத்துக் கொண்டனர்.
பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தின நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. துணை மேலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.