உள்ளூர் செய்திகள்
மாரியப்பன் கென்னடி இன்று பதவியேற்றார்.

முதல் நகரசபை தலைவர் பதவியேற்பு

Published On 2022-03-04 16:18 IST   |   Update On 2022-03-04 16:22:00 IST
மானாமதுரை முதல் நகரசபை தலைவராக மாரியப்பன் கென்னடி இன்று பதவியேற்றார்.
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்து சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 27வதுவார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி வெற்றி பெற்றார். தற்போது தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் தலைவர் பதவிக்கு மாரியப்பன் கென்னடி அறிவிக்கப்பட்டு உள்ளார். 

மானாமதுரை நகராட்சி வார்டுகளில் அதிக அளவில் தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளதால் முதல் நகரசபை தலைவராக போட்டியின்றி முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தேர்வானார். அவர் இன்று காலை மானாமதுரை நகராட்சியின் முதல் தலைவராக பதவி யேற்றார். 

இவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது மாவட்டத் தியே முதல் முறையாக மானாமதுரை&சிவகங்கை இடையே மகளிருக்கென தனி பஸ்கள் விட பெரும் முயற்சி செய்தார். தற்போதுவரை பெண்களுக்கு பெரிதும் பயன் உள்ளது. மாரி யப்பன் கென்னடி நகரசபை தலைவராக வந்துள்ளதால் மக்களுக்கு அடிப்படை தேவையான வசதிகள் கிடைக்கும் என மானாமதுரை நகராட்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Similar News