உள்ளூர் செய்திகள்
கைது

சிதம்பரம் பகுதிகளில் கஞ்சாவுடன் 2 பேர் கைது

Published On 2022-03-01 15:45 IST   |   Update On 2022-03-01 15:45:00 IST
வாகீச நகர் பூங்கா அருகே சந்தேகத்திற்கு இடமான நபரை போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் தடைசெய்யப்பட்ட கஞ்சா சுமார் ஒரு கிலோ 100 கிராம் மறைத்து வைத்திருந்ததை கைப்பற்றி அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் நகர போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வாகீச நகர் பூங்கா அருகே சந்தேகத்திற்கு இடமான நபரை போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் தடைசெய்யப்பட்ட கஞ்சா சுமார் ஒரு கிலோ 100 கிராம் மறைத்து வைத்திருந்ததைக் கைப்பற்றி அந்த நபரை கைது செய்தனர்.

விசாரணையில் சிதம்பரம் தில்லை நகரை சேர்ந்த மணிவேல் (27) என்பது தெரியவந்தது. இதேபோல் கிள்ளை மீனவர் காலனி காந்தி சிலை அருகே தெற்கு தெருவை சேர்ந்த கிருபாநிதி (24) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

Similar News