உள்ளூர் செய்திகள்
சமத்துவ மக்கள் கட்சி

நெல்லிக்குப்பம் நகராட்சி தேர்தலில் ஒரு ஓட்டு கூட பெறாத ச.ம.க. வேட்பாளர்

Published On 2022-02-23 16:56 IST   |   Update On 2022-02-23 16:56:00 IST
நெல்லிக்குப்பம் நகராட்சி 25-வது வார்டில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நகர செயலாளர் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.
கடலூர்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி 25-வது வார்டில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நகர செயலாளர் சதீஷ்குமார் போட்டியிட்டார். அந்த வார்டில் இவருக்கு ஓட்டு இல்லை. தேர்தலில் சதீஷ்குமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.

மேலும் 3 வது வார்டில் அ.ம.மு.க. மாயகிருஷ்ணன், 11 வது வார்டில் பா.ஜ., செந்தில்குமார் ஆகியோர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றனர். விருத்தாசலம் நகராட்சியில் 17- வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட அருண்குமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை. 

Similar News