உள்ளூர் செய்திகள்
தற்கொலை

சேலம் பொன்னம்மாப்பேட்டையில் ஐ.டி.நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2022-02-22 12:06 IST   |   Update On 2022-02-22 12:06:00 IST
சேலம் பொன்னம்மாப்பேட்டையில் ஐ.டி.நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைசாமி. இவரது மகன் சிவசங்கர் (வயது 29). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் சிவசங்கர் நேற்றிரவு சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வெகு நேரமாக பெற்றோருடன் சிவசங்கர் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் பெற்றோர் அவரிடம் இன்று காலை கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறி உள்ளனர். தொடர்ந்து அவர் தூங்க சென்றார்.

இதற்கிடையே இன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிவசங்கர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதனை அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். சிவசங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News