உள்ளூர் செய்திகள்
வாக்களித்த மக்கள்

புவனகிரி பேரூராட்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்

Published On 2022-02-19 16:41 IST   |   Update On 2022-02-19 16:41:00 IST
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட புவனகிரி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளுக்கு 21 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
புவனகிரி:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட புவனகிரி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளுக்கு 21 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து புவனகிரி பேரூராட்சியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து செல்வதை காண முடிந்தது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பேரூராட்சி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News