உள்ளூர் செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

வடலூர், குறிஞ்சிப்பாடியில் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்

Published On 2022-02-19 16:20 IST   |   Update On 2022-02-19 16:20:00 IST
வடலூர், குறிஞ்சிப்பாடியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
மந்தாரகுப்பம்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளுக்கு 45 வாக்குச்சாவடி மையங்களிலும், குறிஞ்சிப்பாடி நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளுக்கு 28 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 7.30 மணி முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவை முன்னிட்டு வேட்பாளர்கள், முகவர்கள் அதிகாலை 5.30 மணிக்கே வாக்குப்பதிவு மையத்துக்கு வந்தனர். அவர்கள் முன்பாக சின்னங்கள் பொருத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் அகற்றப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

Similar News