உள்ளூர் செய்திகள்
மாயம்

விருத்தாசலம் அருகே இளம்பெண் மாயம்

Published On 2022-02-19 15:45 IST   |   Update On 2022-02-19 15:45:00 IST
விருத்தாசலம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே உள்ள நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி துர்கா (வயது 19). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற துர்கா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் செல்வகுமார் துர்க்காவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News