உள்ளூர் செய்திகள்
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை
ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்க கோரி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் நாளை (19-ந் தேதி) நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. அதன்படி கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் நேற்றுடன் பிரசாரம் முடிந்தது.
இன்று காலை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தங்கள் போராட்டம் குறித்து கூறுகையில்கடலூர் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் ஒரு சில கட்சியினர் வீடு வீடாக வாக்களிக்க பணம் கொடுத்து வருகின்றனர். இது குறித்து புகார் கொடுத்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றனர்.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வாக்காளர்களுக்கு பணம் தரும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்ம். இதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.ர் திடீரென நடந்த இந்த முற்றுகை போராட்டம் மாநகராட்சி அலுவலக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.