உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி அருகே கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து
திட்டக்குடி அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று அணைத்ததால் அதிகளவில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு விவசாயி.இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் கரும்பு தோட்டம் உள்ளது.
நேற்றிரவு அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் நெருப்பு பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சிஅளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் திரண்டனர்.
இதுகுறித்து அவர்கள் திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அதிகளவில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு விவசாயி.இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் கரும்பு தோட்டம் உள்ளது.
நேற்றிரவு அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் நெருப்பு பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சிஅளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் திரண்டனர்.
இதுகுறித்து அவர்கள் திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அதிகளவில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.