உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே மாசி மகத்தையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்த மக்கள்
பண்ருட்டி அருகே மாசி மகத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து கோவில் திருக்குளத்தில் சிவாச்சாரியாரிடம் திதி கொடுத்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே காடாம்புலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வேகாக்கொல்லையில் களப்பாளீஸ்வரர் கோவிலில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமகம் தினத்தன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஐதீக திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல மாசிமகம் தினமான இன்று திதி கொடுக்கும் அதிக நிகழ்வு இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து கோவில் திருக்குளத்தில் சிவாச்சாரியாரிடம் திதி கொடுத்தனர்.
இதற்காக அந்தகோவில் குளத்தினை பண்ருட்டிதுணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆய்வு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கினார்.