உள்ளூர் செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2022-02-17 16:08 IST   |   Update On 2022-02-17 16:08:00 IST
வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அறிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இதில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்றுடன் பிரச்சாரம் ஓய்வடையும் நிலையில் நாளை வாக்குச்சாவடிகள் தயாராக வைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் வெற்றி யாருக்கு?- இறுதி கள நிலவரம்

Similar News