உள்ளூர் செய்திகள்
மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து போலீசார் அறிவுரை வழங்கினர்

பண்ருட்டி அருகே மாணவர்கள் திடீர் மோதல்-பரபரப்பு

Published On 2022-02-16 15:43 IST   |   Update On 2022-02-16 15:47:00 IST
பண்ருட்டி அருகே மோதலில் ஈடுபட்ட இருதரப்பு மாணவர்களையும் தனித்தனியாக அழைத்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை போலீசார் வழங்கினர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே சிறுகிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சிறு கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குள் திடீர் வாய்தகராறு ஏற்பட்டது.

வாய்தகராறு முற்றி இரு தரப்பு மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் நிலவியது.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சிறுகிராமம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு விரைந்துசென்றனர். அங்கு மோதலில் ஈடுபட்ட இருதரப்பு மாணவர்களை அழைத்து எச்சரித்தனர்.

உடனடியாக மோதலுக்கு காரணமான மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டனர். பள்ளி ஆசிரியர்கள், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்,பெற்றோர்களிடம் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு பதட்டம் தணிந்தது.

அதனை தொடர்ந்து இரு தரப்பு மாணவர்களையும் தனித்தனியாக அழைத்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை போலீசார் வழங்கினர்.

Similar News