உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

பயிறு, உளுந்து பாதிப்புக்கு பயிர் காப்பீடு செய்ய 15-ந்தேதி கடைசி நாள்

Published On 2022-02-13 15:19 IST   |   Update On 2022-02-13 15:19:00 IST
நாகை மாவட்டத்தில் பயிறு, உளுந்து பாதிப்புக்கு பயிர் காப்பீடு செய்ய 15-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்பு ராஜ் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாகை மாவட்டத்தில் பயிறு, உளுந்து கனமழையால் பாதிக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் வருகிற 15-ந்தேதி 
பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்.

கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் வாங்கிக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பொது நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளில் 
15-ந்தேதி வரை பாரத பிரதமர் காப்பீடுத்திட்டம் செய்ய கடைசி நாள். 

எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு 
தெரிவித்துள்ளார்.

Similar News