உள்ளூர் செய்திகள்
தாய்மார்களுக்கு காய்கறி நறுக்கி கொடுத்து வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்

தாய்மார்களுக்கு காய்கறி நறுக்கி கொடுத்து வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்

Published On 2022-02-13 10:18 IST   |   Update On 2022-02-13 10:18:00 IST
அடுப்பாங்கரை வரை சென்று வாக்கு கேட்பதால் அவர்களின் மனதில் நிற்கும் வேட்பாளராக நான் இருப்பேன் என பெருமையுடன் கூறி வருகிறார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் 4-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரான பி.இ. பட்டதாரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீடு, வீடாக சென்று காலை நேரங்களில் சமையல் செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு உதவுவதாக கூறி அவர்களுக்கு காய்கறிகளை அரிவாள்மனையில் நறுக்கி கொடுத்து ஓட்டு வேட்டையாடி வருகிறார். 

அடுப்பாங்கரை வரை சென்று வாக்கு கேட்பதால் அவர்களின் மனதில் நிற்கும் வேட்பாளராக நான் இருப்பேன் என்று அவர் பெருமையுடன் கூறி வருகிறார். 

Similar News