உள்ளூர் செய்திகள்
அன்னதாட்சி

அ.தி.மு.க. வேட்பாளர் திடீர் மரணம்

Published On 2022-02-12 13:00 IST   |   Update On 2022-02-12 13:00:00 IST
மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி அன்னதாட்சி (64).

இவர் மயிலாடுதுறை நகராட்சி 19&வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டுகிறார். 

நேற்று அன்னதாட்சி தொண்டர்களுடன் காலையில் வாக்கு சேகரித்தார். தை கடைசி வெள்ளியான நேற்று காலை அன்னதாட்சி விரதம் இருந்துள்ளார்.

மதியம் உணவு அருந்திய அவர் மாலை சின்ன மாரியம்மன் கோவிலில் நடந்த குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்ட போது மயக்க மடைந்ததால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News