உள்ளூர் செய்திகள்
பால்குடம் எடுத்து வரப்பட்டது.

பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா

Published On 2022-02-12 07:19 GMT   |   Update On 2022-02-12 07:19 GMT
தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை வண்டிக்காரத் தெரு பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு 38&வது ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. 

நகர பூக்கடை வியபாரிகள் சங்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் விரதமிருந்த காவிரி துலா கட்டத்திலிருந்து பால்குடங்களை எடுத்தும், உடலில் அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர்.

மேளவாத்தியங்கள் முழங்க சிவன், பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் பால்குட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னர் பிரசன்ன மாரியம்மனுக்கு பால் அபிஷேகம், தீப ஆராதனை நடந்தது. 

இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை பூக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News