உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

ரேஷன் கடை திறக்க வேண்டி கிராம மக்கள் கோரிக்கை

Published On 2022-02-11 15:30 IST   |   Update On 2022-02-11 15:30:00 IST
கொள்ளிடம் அருகே சென்னியநல்லூரில் ரேஷன் கடை திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் அகரஎலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.

 இந்த ரேஷன் கடையில் 1300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்த கடைக்கு சென்னிய நல்லூர் கிராமத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் 
4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். 

இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வடரங்கம் கிராமத்திற்கு சென்று அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு 4 கி.மீ. தூரம் நடந்தும் இரு சக்கர வாகனங்களிலும் சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இங்குள்ள குடும்ப அட்டைதாரர்கள் வடரங்கம் கிராமத்துக்குச் சென்று பொருட்களை வாங்கி வருவதற்கு தேவையில்லாத கால விரயத்தை சந்தித்து வருகின்றனர். 

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 1986-ம் ஆண்டு முதல் இப்படி 4 கிலோ மீட்டர் தூரம் சென்று வடரங்கத்திலுள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னியநல்லூரில் தனியாக ஒரு புதிய பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டால் இங்குள்ள கிராம மக்கள் சிரமமின்றி அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் சிரமமின்றி வாங்க முடியும். 

மேலும் கால விரயத்தையும் தவிர்க்க முடியும். 

எனவே சென்னியநல்லூர் கிராமத்தில் உள்ள 350 குடும்ப அட்டைதாரர்களின் நலன்கருதி அக்கிராமத்தைச் சேர்ந்த மக்களின் 10 ஆண்டு கோரிக்கையான புதிய ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இயக்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

Similar News