உள்ளூர் செய்திகள்
பயிற்சி வகுப்பு, உள்ளாட்சி தேர்தல்

நகராட்சி தேர்தலையொட்டி அரசு ஊழியர்களுக்கு பயிற்சி

Published On 2022-02-11 15:30 IST   |   Update On 2022-02-11 15:30:00 IST
சீர்காழியில் நகராட்சி தேர்தலையொட்டி அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
சீர்காழி:

தமிழகத்தில் வருகிற பிப். 19ந்தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு சீர்காழி தனியார் மண்டபத்தில் தேர்தல் நடைமுறைகள் குறித்து சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சீர்காழி கோட்டாசியர் நாராயணன் கலந்து கொண்டு தேர்தலில் பணியாற்றுவது குறித்து விளக்கம் அளித்தார். நகாரட்சி தேர்தல் அதிகாரியான செல்லதுரை, காதர்கான், ஜேம்ஸ் சார்லஸ் கலந்து கொண்டு எவ்வாறு தேர்தல் பணியில் ஈடுவது குறித்து ஆலோசனை வழங்கினர்.

இந்த பயிற்சி வகுப்பில் அரசு ஊழியர்கள் சுமார் 130க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இநிகழ்ச்சியில் சீர்காழி நகராட்சி (பொ) ஆணையர் முகம்மது இப்ராகிம், அரசு மருத்துவர் கனிமொழி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

Similar News