உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பண்ருட்டியில் காதலி பேசாததால் மாணவர் தற்கொலை

Published On 2022-02-10 17:01 IST   |   Update On 2022-02-10 17:01:00 IST
பண்ருட்டியில் காதலி பேசாததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி வீதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 30) இவர் நேற்று மாலை குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் புடவை துணியால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல இதே தெருவை சேர்ந்த மூர்த்தி என்பது மகன் கவியரசன் (22).இவர் சென்னையில் ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டரில் படித்து வந்தார்.

இவருக்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பெண் இவருடன் பேசவில்லை என்பதால் தனது வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோலஅதே தெருவை சேர்ந்த பலராமன் (82). இவர் சர்க்கரை நோயாளி. சர்க்கரைநோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக 2 கால்களில் உள்ள விரல்கள் எடுக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த பலராமன் தனது உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்தார்.

தகவல் அறிந்ததும் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்புஷ்பராஜ், ரங்கநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் உடல்களை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News