உள்ளூர் செய்திகள்
மாணவர் திடீர் மரணம்: மருத்துவமனைக்கு அழைத்து செல்லாத தலைமை ஆசிரியை-ஆசிரியர் சஸ்பெண்டு
உயிரிழந்த மாணவர் நிதிஷ் குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் உடனடியாக முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கிட முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியை சேர்ந்த நாடிமுத்து-போதினி தம்பதியின் மகன் நிதிஷ் குமார் (வயது 9). இவன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற நிதிஷ்குமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கூறியுள்ளனர்.
மேலும் மாணவனை ஆசிரியர் ஒருவர் வீட்டில் கொண்டு விட்டு உள்ளார். வீட்டிலிருந்தவர்கள் நிதிஷ்குமாரை உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி அறிவுறுத்தினர்.
அதன்படி அழைத்து சென்றபோது வழியிலேயே அவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாணவன் நிதிஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
ஆனால் மாணவன் உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து முள்ளூர் விளக்கு பகுதியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மாணவனின் சாவுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் கோரிக்கை வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் மாலை 4 மணிக்கு மேல் தொடங்கிய போராட்டம் இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது.
கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கிடையே, ஒரு வழியாக வாகனங்கள் சென்றதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆத்திரம் அடைந்தனர். வாகனங்களை மறித்தவர்கள் கலெக்டர், போலீஸ் எஸ்.பி., அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் வர வேண்டும் என்றனர்.
அதன்பேரில் அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர், எஸ்.பி., முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவன் நிதிஷ்குமாரின் சாவு தொடர்பாக விசாரணை நடத்தப்படும், மாணவனை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதது ஆசிரியர்களின் தவறு தான். மாணவன் சாவுக்கு அரசு தரப்பில் இருந்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கவிதாராமு உறுதியளித்தார்.
மேலும் பள்ளி ஆசிரியர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கூறினார். மேலும் மாணவன் சாவில் பள்ளியில் கவனக்குறைவாக பணியாற்றிய தலைமை ஆசிரியை மகேஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானமடைந்து இரவு 9 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான் விடுதியை சேர்ந்த நாடிமுத்து, போதினி தம்பதியினரின் மகன் நிதிஷ்குமார் எதிர்பாராத வகையில் உயிர் இழந்த செய்தியை கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர் இழந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் உடனடியாக முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கிட முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியை சேர்ந்த நாடிமுத்து-போதினி தம்பதியின் மகன் நிதிஷ் குமார் (வயது 9). இவன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற நிதிஷ்குமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கூறியுள்ளனர்.
மேலும் மாணவனை ஆசிரியர் ஒருவர் வீட்டில் கொண்டு விட்டு உள்ளார். வீட்டிலிருந்தவர்கள் நிதிஷ்குமாரை உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி அறிவுறுத்தினர்.
அதன்படி அழைத்து சென்றபோது வழியிலேயே அவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாணவன் நிதிஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
ஆனால் மாணவன் உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து முள்ளூர் விளக்கு பகுதியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மாணவனின் சாவுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் கோரிக்கை வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் மாலை 4 மணிக்கு மேல் தொடங்கிய போராட்டம் இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது.
கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கிடையே, ஒரு வழியாக வாகனங்கள் சென்றதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆத்திரம் அடைந்தனர். வாகனங்களை மறித்தவர்கள் கலெக்டர், போலீஸ் எஸ்.பி., அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் வர வேண்டும் என்றனர்.
அதன்பேரில் அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர், எஸ்.பி., முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவன் நிதிஷ்குமாரின் சாவு தொடர்பாக விசாரணை நடத்தப்படும், மாணவனை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதது ஆசிரியர்களின் தவறு தான். மாணவன் சாவுக்கு அரசு தரப்பில் இருந்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கவிதாராமு உறுதியளித்தார்.
மேலும் பள்ளி ஆசிரியர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கூறினார். மேலும் மாணவன் சாவில் பள்ளியில் கவனக்குறைவாக பணியாற்றிய தலைமை ஆசிரியை மகேஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானமடைந்து இரவு 9 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான் விடுதியை சேர்ந்த நாடிமுத்து, போதினி தம்பதியினரின் மகன் நிதிஷ்குமார் எதிர்பாராத வகையில் உயிர் இழந்த செய்தியை கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர் இழந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் உடனடியாக முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கிட முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.