உள்ளூர் செய்திகள்
இக்குறும்படங்களை கலெக்டர் அலுவலகத்தில் பார்வையிட்ட மாவட்ட தேர்தல் பார்வையாளர், கலெக்டர் ஆகியோர் பொதுமக்களிடையே

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு

Published On 2022-02-09 15:09 IST   |   Update On 2022-02-09 15:09:00 IST
புதுக்கோட்டையில் எல்.இ.டி. திரை மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பும் வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடை பெறவுள்ளதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி வேட்பு மனு தாக்கல் நிறைவுபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் தயார் செய்யப்பட்டு, சமூக ஊடகம், தொலைக்காட்சிகள் உள்ளிட்டவைகள் மூலமாக விளம்ப ரப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் இக்குறும்படங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் தேர்தல் நடைபெறும் 2  நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள்,

கடை வீதிகள், உழவர் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் செய்தி மக்கள்தொடர்புத்துறையின் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனம் மூலம் விளம்பர பணிகள் நடந்து வருகிறது.

இக்குறும்படத்தில் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்தும்,

நேர்மையான முறையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பது குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகை யில் தயார் செய்யப்பட் டுள்ள குறும்படங்கள் 7.2.2022 முதல் 18.2.2022 வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் திரையிடப்படவுள்ளது.

Similar News