உள்ளூர் செய்திகள்
ஆபத்தான முறையில் பஸ் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்
பஸ் வசதி இல்லாதால் மாணவ, மாணவிகள் அவதி
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அருகில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
கந்தர்வக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, மருதன் கோன் விடுதிஅரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் உள்ளன.
இந்தநிலையில் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை. மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் ஒரே நேரத்தில் 300க்கும் அதிகமான மாணவர் கள் ஒரு பேருந்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகி வருகிறது. அரசு அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகம் மூலம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கல்லாக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் சுமார் 300 மாணவர்கள் பயணம் செய்ய முயன்றனர். உடனடியாக பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி விட்டு, கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மாணவர்களிடம் பேசி கூடுதல் பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும், தற்போது ஒரு பேருந்தில் குறிப்பிட்ட அளவு பயணிகளை மட்டுமே செல்லவும் அறிவுறுத்தினர். இதனால் மற்ற மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல இரவு 8 மணி ஆனது.
எனவே காலை, மாலை நேரங்களில் கந்தர்வகோட்டை பட்டுக்கோட்டை மார்க்கமாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பெற்றோர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கந்தர்வகோட்டை அருகில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
கந்தர்வக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, மருதன் கோன் விடுதிஅரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் உள்ளன.
இந்தநிலையில் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை. மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் ஒரே நேரத்தில் 300க்கும் அதிகமான மாணவர் கள் ஒரு பேருந்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகி வருகிறது. அரசு அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகம் மூலம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கல்லாக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் சுமார் 300 மாணவர்கள் பயணம் செய்ய முயன்றனர். உடனடியாக பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி விட்டு, கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மாணவர்களிடம் பேசி கூடுதல் பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும், தற்போது ஒரு பேருந்தில் குறிப்பிட்ட அளவு பயணிகளை மட்டுமே செல்லவும் அறிவுறுத்தினர். இதனால் மற்ற மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல இரவு 8 மணி ஆனது.
எனவே காலை, மாலை நேரங்களில் கந்தர்வகோட்டை பட்டுக்கோட்டை மார்க்கமாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பெற்றோர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.