உள்ளூர் செய்திகள்
சந்தனக்கூடு வைபவம் ஊர்வலமாக வந்தது.

அன்னை அஜ்மத்பீவி தர்ஹாவில் சந்தனக்கூடு, கந்தூரி விழா

Published On 2022-02-09 13:42 IST   |   Update On 2022-02-09 13:42:00 IST
சீர்காழி அருகே அன்னை அஜ்மத்பீவி தர்ஹாவில் சந்தனக்கூடு, கந்தூரி விழா நடைபெற்றது.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலையில் அன்னை அஜ்மத் பீவி தர்ஹா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம். 

அதேபோல் இந்தவருடம் கடந்த 2 ம் தேதி கொடியேற்றத்துடன் கந்தூரிவிழா தொடங்கியது.

தொடர்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் இன்று விடியற்காலை 4 மணிக்கு சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அன்னை அஜ்மத் பீவி தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. 

இதில் சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மவுலானாவின் கலிபாக்கல், சீடர்கள், பங்கேற்றனர். விழாவில் மதசார்பற்ற அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்தனர்.

Similar News