உள்ளூர் செய்திகள்
பொது மக்கள் பள்ளியை முற்றுகையிட்ட போது எடுத்த படம்.

பள்ளி மாணவன் திடீர் சாவு

Published On 2022-02-09 13:39 IST   |   Update On 2022-02-09 13:39:00 IST
ஆலங்குடியில் பள்ளி மாணவன் சாவு
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த  நாடிமுத்து  மகன் நிதிஷ்குமார் (வயது 9). இவர் பாப்பான் விடுதி அரசு நடுநிலைப்பள்ளியில்  4ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பள்ளிக்குச்சென்று  வகுப்பில் இருந்துள்ளார். அப்போது வகுப்பில் மயக்கமடைந்து கீழே விழுந்ததாக  கூறப்படுகிறது.இதையடுத்து உடனடியாக பள்ளி ஆசிரியர் அவரை மீட்டு அவரது பெற்றோரி டம் நிதிஷ் குமாரை ஒப்படைத்தனர்.

மாணவனின்  பெற்றோர்கள் உடனடியாக  நிதிஷ் குமாரை   ஆலங்குடியில்  உள்ள தனியார்  மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் தனியார் மருத்துவமனை டாக்டர்  அவரை உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவரை  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அப்போது  நிதிஷ்குமாரை  பரிசோதனை செய்த  டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவனின் உடல்  உடற் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாப்பான் விடுதி கிராம மக்கள் பள்ளியை  முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும்  ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும் மாணவனின் பெற்றோர் தரப்பில் இறந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News