உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்பு

Published On 2022-02-08 12:50 IST   |   Update On 2022-02-08 12:50:00 IST
மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெங்கிடகுளம் ஊராட்சி சொரியன்தோப்பு கிராமத்தில் வசித்து வந்தவர் பனையப்பன் ( வயது 70). இவர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள், பனையப்பனை பல பகுதிகளில் தேடிவந்தனர்.

இந்நிலையில் சொரியன்தோப்பு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதைனை அறிந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தது காணாமல்போன பனையப்பன் என்பது உறுதிசெய்தனர். 

பின்னர் ஆலங்குடி போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பனையப்பனின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

பின்னர் இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News