உள்ளூர் செய்திகள்
.

வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை

Published On 2022-02-06 15:37 IST   |   Update On 2022-02-06 15:37:00 IST
ஐ.டி.ஐ. படித்து முடித்த வாலிபர் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி துரைசாமி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பவின் (வயது 22). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த பவின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News