உள்ளூர் செய்திகள்
வாக்குப்பதிவு இயந்திரம்

மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் கணவன்-மனைவி போட்டி

Published On 2022-02-05 16:37 IST   |   Update On 2022-02-05 16:37:00 IST
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் 14-வது வார்டில் தி.மு.க., சார்பில் பேரூராட்சி செயலாளர் ஜெயமூர்த்தியும் 4-வது வார்டில் அவரது மனைவி மணிமேகலையும் போட்டியிடுகின்றனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம் பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகள் பெண்களுக்கும் தலைவர் பதவி பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட 51 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தி.மு.க., சார்பில் 14-வது வார்டில் பேரூராட்சி செயலாளர் ஜெயமூர்த்தியும் 4-வது வார்டில் அவரது மனைவி மணிமேகலையும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் 2 பேரும் இதற்கு முன்பு பேரூராட்சி தலைவர்களாக பணியாற்றி உள்ளனர். தற்போது தி.மு.க., வேட்பாளர்கள் அதிகளவு வெற்றி பெற்றால் மீண்டும் இருவரில் ஒருவர் தலைவராக வாய்ப்புள்ளது. கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் மீண்டும் தலைவராக வேண்டுமென்பதால் இருவரும் போட்டியிடுகின்றனர்.

Similar News