உள்ளூர் செய்திகள்
போராட்டம்

கடலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-02-05 15:59 IST   |   Update On 2022-02-05 15:59:00 IST
திராவிட கழகம் சார்பில் காந்தி நினைவு நாளில் கோட்சே பெயரை கூற தடைவிதித்ததை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:

திராவிட கழகம் சார்பில் காந்தி நினைவு நாளில் கோட்சே பெயரை கூற தடைவிதித்ததை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் மணிவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் நிர்வாகிகள் ராவணன், இந்திரசித், வேணுகோபால், தமிழன்பன், சேகர், சின்னதுரை, மாதவன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் எழிலேந்தி நன்றி கூறினார்.

Similar News