உள்ளூர் செய்திகள்
கைது

சிதம்பரத்தில் கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு- 2 பேர் கைது

Published On 2022-02-05 15:56 IST   |   Update On 2022-02-05 15:56:00 IST
சிதம்பரத்தில் கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் விக்னேஷ்(வயது 27). இவர் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விக்னேசை வழிமறித்து, கத்தி முனையில் செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்துச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கே.ஆடூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமரன் மகன் சிவா (எ) சிவராஜ்(24), ராஜசேகரன் மகன் விமல்ராஜ்(22) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News