உள்ளூர் செய்திகள்
மனு தாக்கல்

ஒரே நாளில் 36 பேர் மனு தாக்கல்

Published On 2022-02-03 15:28 IST   |   Update On 2022-02-03 15:28:00 IST
சிவகங்கை நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் 36 பேர் மனு தாக்கல் செய்தனர்.
சிவகங்கை

சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் கடந்த 3 நாட்களில் 5 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அ.தி.மு.க. சார்பில் 23 வேட்பாளர்களும், பா.ஜனதா சார்பில் 2 வேட்பாளர்களும், தே.மு.தி.க. சார்பில் 1 வேட்பாளரும், நாம் தமிழர் கட்சி சார்பில் 3 வேட்பாளரும், சுயேட்சையாக 7 வேட்பாளர் என 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

சிவகங்கை நகராட்சியில் போட்டியிட நேற்று வரை 41 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News