உள்ளூர் செய்திகள்
சிவகங்கை நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் 36 பேர் மனு தாக்கல் செய்தனர்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் கடந்த 3 நாட்களில் 5 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அ.தி.மு.க. சார்பில் 23 வேட்பாளர்களும், பா.ஜனதா சார்பில் 2 வேட்பாளர்களும், தே.மு.தி.க. சார்பில் 1 வேட்பாளரும், நாம் தமிழர் கட்சி சார்பில் 3 வேட்பாளரும், சுயேட்சையாக 7 வேட்பாளர் என 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சிவகங்கை நகராட்சியில் போட்டியிட நேற்று வரை 41 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.