உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. பல மாதங்களுக்கு பின் 1ம் வகுப்பு மதல் 12ம் பகுப்பு வரை பள்ளிகள் திறக்ப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்.
அவர்களை பள்ளி நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேன் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டும், கிருமிநாசினி மருந்து மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டன.
வகுப்பறைகளில் சமுக இடைவெளிவிட்டு அமர வைக்கப்பட்டனர்.
இதே போல கல்லூரிகளும் திறக்கப்பட்டு இருந்தன.