உள்ளூர் செய்திகள்
முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதல்
முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சி ஏடி காலனியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன்கள் கர்ணன் (வயது27). கலையரசன் (24). ராமகிருஷ்ணன் (19). இவர்களுக்கும்,
பள்ளத்திவிடுதி காலனியைச் சேர்ந்த ஸ்ரீமான், பிரவீன், அன்பு ஆகியோருக்கும் இடையே ஜல்லிக்கட்டு காளையை கட்டியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு கல்லாலங்குடி ஆர்ச் பகுதியில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அரிவாளால் தாக்கி கொண்டனர்.
இதில், படுகாயம் அடைந்த கர்ணன், கலையரசன், ஸ்ரீமான், பிரவீன் ஆகியோரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சி ஏடி காலனியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன்கள் கர்ணன் (வயது27). கலையரசன் (24). ராமகிருஷ்ணன் (19). இவர்களுக்கும்,
பள்ளத்திவிடுதி காலனியைச் சேர்ந்த ஸ்ரீமான், பிரவீன், அன்பு ஆகியோருக்கும் இடையே ஜல்லிக்கட்டு காளையை கட்டியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு கல்லாலங்குடி ஆர்ச் பகுதியில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அரிவாளால் தாக்கி கொண்டனர்.
இதில், படுகாயம் அடைந்த கர்ணன், கலையரசன், ஸ்ரீமான், பிரவீன் ஆகியோரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.