உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

நெல் அறுவடை எந்திரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

Published On 2022-02-01 12:10 IST   |   Update On 2022-02-01 12:10:00 IST
நெல் அறுவடை எந்திரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:

தஞ்சாவூர் மாவட்டம் கண்ணாத்தாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி இவரது மகன் மணிகண்டன் (வயது 27). இவர், கறம்பக்குடி அருகே உள்ள கீழாத்தூரை சேர்ந்த ஸ்ரீராம் என்பவரது நெல் அறுவடை எந்திரத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று நெல் அறுவடை பணிக்கு செல்வதற்காக, ஸ்ரீராம் வீட்டில் இருந்து நெல் அறுவடை எந்திரத்தை எடுத்துச் சென்றுள்ளார். அவர் அருகே மணிகண்டன் அமர்ந்திருந்தார்.

கீழாத்தூர் பிரிவு சாலை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மணிகண்டன் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் ரெகுநாதபுரம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News