உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோட்டில் கொரோனா தினசரி பரிசோதனை 5 ஆயிரமாக அதிகரிப்பு

Published On 2022-01-31 14:59 IST   |   Update On 2022-01-31 14:59:00 IST
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி கொரோனா பரிசோதனை 5 ஆயிரமாக அதிகரித்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி கொரோனா பரிசோதனை 5 ஆயிரமாக அதிகரித்து உள்ளதாக  தெரிவித்து உள்ளனர்.  

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை  காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா  தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. முதலில் பாதிப்பு குறைந்த நேரத்தில் தினமும் 2,000 வரை கொரோனா  தினசரி பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.  

பின்னர் பாதிப்பு அதிகரித்தபோது தடுப்பு நடவடிக்கையாக  கொரோனா  தினசரி பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த சில நாட்களாக 4 ஆயிரம் முதல் 4, 500  வரை தினசரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.  இந்நிலையில் நேற்று   ஒரே நாளில் 5,027 பேருக்கு  பரிசோதனை செய்யப்பட்டது.  

பரிசோதனையை அதிகரித்ததன் காரணமாக  தொற்று ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 1127 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால்  பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரே நாளில் 997 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 498 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இதுவரை 725 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 8,781 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News