உள்ளூர் செய்திகள்
பராமரிப்பு பணி காரணமாக தேவகோட்டை பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவடம் தேவகோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக தேவகோட்டை டவுன், உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தேவகோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.