உள்ளூர் செய்திகள்
நகை பறிப்பு

கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2022-01-21 10:37 GMT   |   Update On 2022-01-21 10:37 GMT
அருப்புக்கோட்டையில் கோவில் விழாவில் பெண்ணிடம் 10 பவுன் தங்க செயின் பறிக்கப்பட்டது.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரத்தைச் சேர்ந்தவர் மீனாள் (வயது 77). கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் பிரசித்தி பெற்ற சென்னகேசவபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை காண மீனாள் சென்றார்.

கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் மீனாள் சாமி தரிசனம் செய்தார். அப்போது மர்ம நபர் நைசாக மீனாள் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினார். 

பின்னர் வீட்டுக்கு வந்த மீனாள் நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News