உள்ளூர் செய்திகள்
முழு ஊரடங்கு கால் சாலைகள் வெறிச்சோடியது
குடியாத்தம் பகுதியில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது
குடியாத்தம்:
குடியாத்தம் நகரில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தது.
குடியாத்தம் தரணம் பேட்டை பஜார், தாழையாத்தம்பஜார், நேதாஜி சவுக், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், காட்பாடி ரோடு நான்கு முனை சந்திப்பு, சித்தூர் கேட், நெல்லூர்பேட்டை, சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
முழு ஊரடங்கால் ஓரிரு இரண்டு சக்கர வாகனங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் தவிர யாரும் செல்லாததால் சாலையில் வெறிச்சோடி உள்ளது.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.