உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் இன்று 337 பேருக்கு கொரோனா

Published On 2022-01-16 07:41 GMT   |   Update On 2022-01-16 07:41 GMT
வேலூரில் இன்று 337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுவரை 53,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,429 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,149 பேர் பலியானார்கள். தற்போது 2,122 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 337 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 267 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை உள்ளவர்களில் இதுவரை யாருக்கும் ஆக்சிஜன் தேவைப்படவில்லை. மேலும் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம். முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News