உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அருகே கிராம மக்களுடன் பா.ஜ.க.வினர் பொங்கல் கொண்டாடினர்.

கிராம மக்களுடன் பா.ஜ.க.வினர் பொங்கல் கொண்டாட்டம்

Published On 2022-01-13 09:36 GMT   |   Update On 2022-01-13 09:36 GMT
திருவண்ணாமலை அருகே கிராம மக்களுடன் பா.ஜ.க.வினர் பொங்கல் கொண்டாடினர்.
 திருவண்ணாமலை:

தமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகையை பா.ஜ.க.வினர் மேலிட உத்தரவின்பேரில் கிராமங்கள் தோறும் கொண்டாடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக பா.ஜ.க. நிர்வாகிகள் கிராமங்கள்தோறும் சென்று கட்சி கொடியேற்றி பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். 

திருவண்ணாமலையை அடுத்த மலப்பம்பாடி கிராமத்தில் நேற்று பா.ஜ.க.சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.  இதையொட்டி கிராமத்தில் பா.ஜ.க. கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். 

அதன் பின்னர் பெண்கள் கிராமத்தில் அழகிய வண்ண கோலமிட்டு புதுப்பானையில் சர்க்கரை பொங்கலிட்டு அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் கர்ணன், வடக்கு ஒன்றிய தலைவர் எம். சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதில் மாவட்ட மகளிர் அணி பொருளாளர் வி. மாலதி கலந்து கொண்டு தனது சொந்த செலவில் 50 பெண்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். முன்னதாக கிளைத் தலைவர் ராமு வரவேற்றுப் பேசினார். முடிவில் தொழில் நுட்ப பிரிவு உறுப்பினர் ஏழுமலை நன்றி கூறினார்.

Tags:    

Similar News